அந்த
ஒற்றைக் குவியம் இடிந்தழிந்து
ஒப்பாரி கேட்டது…
அன்றெங்கள்…
நாக்கு அறுபட்டு – இன்று
நானூறு வருடம் கழிந்தே போனது…
வாடா மலரில்…
வாசத்தின் உறைவிடத்தில் – உயிர்
தீய்ந்துபோக – உடல்
தீமிதித்தது…
சுவாசம் அழிந்து
நாசமாய்ப்போனது…
அடிக்கவா முடியும்?
மடிந்து முடங்கிக் கிடக்கும்
அடிமைத் தனத்திற்கு
குளறத்தானே முடியும்…
எத்தனை திருக்கோவில்கள்
எத்தனை சிவன்கள் இருந்தாலும் – அவன் அத்தனையும் தாண்டிய சீவன்…
இங்கு எவரின்…
உற்ற அப்பனினதும் பெத்தப்பன்!
தாயினும் நல்ல தலைவன்..
அது…
இறையின் காட்சிபீடமன்று – எம்
நிறையின் ஆட்சிபீடம்!
தென்பட்டுச் சுழன்ற
பண்பாட்டு மையம்!
அங்கு…
வெள்ளையன் சுளாவிய..
திரவியம் பெரிதன்று
திரு இறையும் பெரிதன்று..
கோயிலும் பெரிதன்று
கோட்டையும் பெரிதன்று…
உடமை பெரிதன்று – எங்கள்
உயிரும் பெரிதன்று…
ஆனால்…
தொன்மைகள் அறுபட்ட
தோரணை பெரியது – எங்கள்
வாண்மைகள் வாடிமறைந்த
வேதனை பெரியது….
வரலாறு செழித்த
கல்வேர் அது…
அறவாட்சியின்
அரண்மனை அது…
மரபு தந்த
மாபெரும் சாசனம் அது…
வாழ்வு தந்த
வையாளிச் சுவடு அது…
தாழ்வு கொண்டதன்
தாற்பரியம் தேடுகிறாயா?
இனியேனும்
ரௌத்திரம் பழகடா தமிழா!
– கொட்டிய ஆரன்
28