Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மரண ஒத்திகை | கவிதை | ப. மதியழகன்மரண ஒத்திகை | கவிதை | ப. மதியழகன்

மரண ஒத்திகை | கவிதை | ப. மதியழகன்மரண ஒத்திகை | கவிதை | ப. மதியழகன்

0 minutes read

எனக்கான அழைப்பு வந்துவிட்டது

கையூட்டு கொடுத்து காரியம்

சாதிக்க முடியாது அங்கே

நாட்கள் நத்தை போல்

நகர்ந்ததாக நினைவிலில்லை

 

எனது வாழ்க்கை கோப்பை

நிரம்பி வழியவில்லை

எனது மரணமொன்றும்

உலகுக்கு இழப்பில்லை

 

வாழ்க்கை என்னை

சாறாகப் பிழிந்து

என்ன சாதிக்க நினைத்ததோ

துயரங்களை மூட்டையாகச் சுமந்து

உடல் கோணிப் போனது

 

எனது உறுப்புகள்

எனது கட்டளைக்கு

இணங்க மறுத்தன

 

இவ்வுலகத்தில் எனது இருப்பு

கேள்விக்குறியானது

 

மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டா

என்ற கேள்விக்கு விடை

கிடைக்கப்போகிறது

 

வாழ்க்கையெனும் மைதானத்தில்

மற்றவர்கள் கால்களில் உதைபடும்

பந்தாகத்தான் இருக்க முடிந்தது.

 

 

 

நன்றி | ப. மதியழகன் | இலக்கியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More