செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஆயிரம் தான் கவி சொன்னேன் | கவி பேரரசு வைரமுத்துஆயிரம் தான் கவி சொன்னேன் | கவி பேரரசு வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் | கவி பேரரசு வைரமுத்துஆயிரம் தான் கவி சொன்னேன் | கவி பேரரசு வைரமுத்து

2 minutes read

ஆயிரம் தான் கவி சொன்னேன்

அழகழகா பொய் சொன்னேன்

பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே

காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து

ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

 

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி

எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி

எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

 

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,

என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,

வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல

வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல

வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

 

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,

இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,

இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!

கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?

தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?

இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,

நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

 

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,

கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,

கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,

தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,

மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

 

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,

சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.

கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,

அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

 

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,

கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,

கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,

தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

 

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

 

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,

காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

 

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,

பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,

அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,

பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

 

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்

கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே

பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே

வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

 

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,

கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….

எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,

உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

 

 

– கவி பேரரசு வைரமுத்து –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More