பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுக்கு மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது. அவ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை பின்வாறு..
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்க தமிழ் மரபுத் திங்கள் எனும் முன் மொழிவு கனாடாவில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப் பட்டு ஒவ்வோரு ஆண்டும் பெரு விழாவாக தமிழர்களின் சமூக கலாசார கலை இலக்கிய கூடலாக நடை பெற்று வருவது நாம் அறிந்ததே.
தமிழர்களுக்கு புத்தாண்டு தை மாதத்திலேயே தை முதல் நாளே என பேரறிஞர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப் பட்டு அதுவே “தமிழர்க்கொரு நாள் அது தமிழர் திருநாள் ” என்ற கருதுகோளுடன் முன்னெடுக்கப் பட்டு தமிழர் வாழும் நாடு தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது.
தமிழ் மரபுத் திங்கள் என்பது நம் அடையாளங்களை பேணவும் காலாதி காலம் உள்ள வரை நம் பின் வரும் சந்ததியினரும் உலகமும் தமிழர் வரலாற்றின் பழைமை செழுமை பண்பாடு ஆகியவற்றை உணரவும் தமிழர் மரபுத் திங்கள் எனும் பிரகடனம் அவசியமாகிறது.
பிரித்தானியாவிலும் அரச அங்கீகாரப் பிரகடனமாக தைத் திங்கள் “தமிழ் மரபுத் திங்களாக ” அறிவிக்க வேண்டும் என்ற நோக்கை முன் வைத்து எதிர்வரும் 18.01.2020 சனிக்கிழமை தமிழ் மரபுத் திங்கள் விழா நடைபெற உள்ளது எல்லோரும் கூடுவோம்… என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.