Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மரம் – முகில் | வியாத்தன்

மரம் – முகில் | வியாத்தன்

0 minutes read

 

தினம் ஓடி ஓய்ந்த முகில்கள்
அடர்ந்த மலையின் கம்பீர மரங்களிடம் கதைக்கேட்டன.

நாங்கள் பூமிக்கும் வானளாவிய பரப்பிற்கும் உல்லாசமாக இருக்கிறோம்.

நீ மட்டும் உன் வாழ்நாள் முழுவதும்
ஒரே இடத்தில் இருக்கிறாய்…
உனக்கு பிடித்திருக்கின்றதா
இந்த வாழ்க்கை ?
என்றது ஓர் முகில்.

ஓர் மரம் தன் சலனம் விட்டு,
நீ உன் வளர்ச்சிக்காக வானூயர செல்கிறாய்…
இருந்தும் சற்றென்று மழையாய் பொழிந்து, மண்ணோடு
நேசம் கொண்டு
மீண்டும் நீராவியாகி விண்ணை அடைவாய்…

ஆனால் என்னிடத்தே அன்றாட தேவைக்கு‌ மனிதன், பட்சியினங்கள் நிரந்தரமாக என் இருப்பிடம் வருவதும்
என் பலனை பெறுவது
அதனை நான் காண்பது சந்தோசமே…

ஓர் இடத்தே இருந்து தானும் வளர்ந்து பிறரையும் வளர வைப்பதே உண்மையான வளர்ச்சி என்றது மரம்…

முகில் தன்னிலை உணர்ந்து வாழ்வின் அர்த்தம் புரிந்து அந்தி சாய்ந்தது.
நீ மரமா ? முகிலா ?…

– வியாத்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More