இருமல், சளி பிரச்சினையை போக்கவல்ல, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு ‘மவுசு’ கூடுகிறது.
இருமல், சளி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை போக்கவல்ல நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ கூடி வருகிறது. இந்த இலைகளை கொண்டு அடை, வடை போன்ற உணவுகளை செய்து மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.
கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.