உடல் சர்க்கரையைக் குறைக்கக் கூடியது. கொலஸ்ட்ராலைக் கரைக்கக் கூடியது.
இதன் மரம் 15 – 20 அடி உயரம் வரை வளரக்கூடும். இந்த மரம் புதர் வடிவ அமைப்பில் இருக்கும்.
நார்த்தம்பழத்தைச் சிறிதளவு எடுத்துக் கொண்டாலும், அதிக பலன்களை தரவல்லது.
இதன் புளிப்புச் சுவை காரணமாக பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
இருப்பினும் சாதம் செய்ய, ஊறுகாய் செய்ய பயன்படுத்துகிறோம். இந்தப் பழத்தின் மீது சிறிது உப்பை தடவி, அப்படியே சாப்பிடலாம். ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.
ஏராளமான நார்ச்சத்து உள்ளது. வைட்டமின்களும், கால்சியமும் அதிகம் இருப்பதால் புத்துணர்ச்சி உடன் வைக்கக்கூடியது.
இந்தப் பழத்தில் கொஞ்சம் கூட கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே இதய நோய்களுக்கான ஆபத்தை தடுக்கிறது.
தினசரி கொஞ்சம் எடுத்துக் கொண்டால் பலமான இதயம் கிடைக்கும்.
இந்தப் பழத்தில் ஒரு நாளிற்கு தேவையான 60%க்கும் மேல் கால்சியம் இருக்கிறது.
ஆகையால் பெரிய நார்த்தம்பழம் சாப்பிட்டால் அத்தனை சக்தியையும் பெற்றுவிடலாம்.
எனவே எலும்புகள், பற்களை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதில் விட்டமின் சி, புரோட்டீன்கள் அதிக அளவில் இருக்கின்றன.
இது தசை உருவாக்கத்திற்கும், தசை இயக்கங்களை மேம்படுத்தவும் ஆற்றல் அளிக்கிறது.