Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நீரில் மிதக்கும் மருத்துவ பயன்கள்

நீரில் மிதக்கும் மருத்துவ பயன்கள்

2 minutes read

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளைக் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெள்ளைநிற மலர்களுடையது வேல்லையல்லியெனவும் செந்நிற மலர்களையடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும் நீல மலர்களுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெரும். தமிழகமெங்கும் குளம், குட்டைகளில் வளர்கின்றன. இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மருத்துவ பயன்கள்:

1. கிழங்கு குளிர்ச்சி தரும். பூ, தாது வெப்பகற்றும் குருதிக்கசிவைத் தடுக்கும்.

2. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும்.

3. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வாலையில் வடித்த நீரை 30 மி.லி யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம் சீல்வருதல் சிருநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.

4. அல்லி கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகக் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். மாதர் கருவுற்றிருக்கும்போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும்.

5. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும், இதயப்படபடப்பைத் தணிக்கும்.

6. கருநெய்தல் மலரில் உள்ள மகரந்த பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More