Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொண்டை சளியை வெளியேற்ற குறிப்புகள்

தொண்டை சளியை வெளியேற்ற குறிப்புகள்

1 minutes read

தொண்டையில் சளி சிக்கியிருந்தால், அது தொண்டை வலியை உண்டாக்கும். இந்த தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற 250-300 மில்லி லிட்டர் நீரை எடுத்து 5 நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயை ஒரு நாளைக்கு 3-4 முறை கொப்பளிக்க வேண்டும்.

ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

15-20 மிலி நெல்லிக்காய் ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒருநாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலைக் குறைக்கும்.

1 டீஸ்பூன் வெந்தயத்தை 250 மில்லி லிட்டர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டைப் புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

250 மில்லி லிட்டர் நீரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நெஞ்சு பகுதியில் மட்டுமின்றி தொண்டையிலும் உள்ள சளி முறிந்து வெளியேறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More