தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சந்தர்ப்பம் இரா.சம்பந்தனுக்கு கிடைத்துள்ளது.
சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாளை மறுதினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியீட்டுள்ளது .