மூன்று பிரிட்டிஷ் பிரஜைகள் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மனிதாபிமான அமைப்பு தெரிவித்தாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த கெவின் கார்ன்வெல் (53) என்று அறியப்படுகின்றார்.
ஜனவரி 11ஆம் திகதி அவரும் பெயரிடப்படாத மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மூன்றாவது பிரிட்டிஷ் நபரும் மற்றுமொரு நாளில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர்களை தொடர்பு கொள்ள கடின முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.