Friday, May 10, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!

வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!

1 minutes read

வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகநபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரைத் தாக்கினார் எனவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை நடந்த இடத்தைச் சோதனை செய்தபோது மதுப் போத்தல்கள், தாக்குதலுக்குப் பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானார் எனவும், இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More