செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூச்சுத் திணறலால் சிறைக் கைதி ஒருவர் சாவு!

மூச்சுத் திணறலால் சிறைக் கைதி ஒருவர் சாவு!

0 minutes read

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவாசக் கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் காலி சிறைச்சாலையின் சந்தேகநபர் 2840 இலக்கமுடைய 32 வயதுடையவர் ஆவார்.

மூச்சுத் திணறல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவரின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More