Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

1 minutes read

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று (11.04.2024) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பபாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திகக் கடந்த நெருப்பாறு என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த புத்தக வெளியீடு தொடர்பாக இன்று விசாரணை இடம்பெற்றதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இரண்டரை மணிநேர விசாரணை

அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்று கேட்கப்பட்டது.

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் | Deepachelvan Cid Investigation

கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More