2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
விஸ்வமடு பாடசாலை வைத்தியசாலையின் சேவைகள் விரிவுபடுத்தி மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காக பல்வேறு இடங்களிலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த உத்தியோகத்தர்களை கடமைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடப்பட்டது . அந்தவகையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் ஏனைய இடம்பெயர் வைத்தியசாலையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் விஸ்வமடு பாடசாலை வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்களுடன் வைத்தியசாலையை சிறப்பாக இயங்க வைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடமைக்கு சமுகமளித்த அனைத்து உத்தியோகத்தர்களும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி செயற்ப்பட முன்வந்தனர்.
வைத்தியசாலையை இயங்க வைப்பதற்கு பலரது உதவிகள் நாடப்பட்டது. அப்போது வவுனியாவில் இயக்கிக்கொண்டு இருந்த முல்லைத்தீவு தற்காலிக அரச அதிபர் பணிமனையில் இருந்து முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் விஸ்வமடு பாடசாலை வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையின் பகுதிகளை சுற்றி பார்வையிட்டார்.
குறிப்பாக மருந்து தேவைகளையும் பற்றியும் கடுமையாக கயமுற்றவர்கள் மற்றும் நோயுற்றவர்களை வவுனியவிக்கு எடுத்து செல்வதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டது. 2008 வருடத்தின் இறுதிப்பகுதியில் முக்கியமான அரச உத்தியோகத்தர்கள் படிப்படியாக வன்னி பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்………………………………
தொடரும்….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/