உக்ரைன் போரில் 2,000 க்கும் மேற்பட்ட பீரங்கிகளை ரஷ்ய படைகள் இழந்ததால், 50 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளை ரஷ்யா பயன்படுத்த தொடங்கியுள்ளதாக உக்ரைன் அரசின் அலோசகர் ஆண்டன் கெரஸ்சென்கோ தெரிவித்துள்ளார்.
1960 களில், சோவியத் யூனியன் காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த T-62 ரக பீரங்கிகள், ரயில் மூலம் ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்படும் காணொலியை அவர் வெளியிட்டுள்ளார்.
இவற்றால் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை எதிர்கொள்ள இயலாது எனக்கூறப்படும் நிலையில், இவற்றை வைத்து ரஷ்யா வெற்றி பெற நினைப்பதாக கெரஸ்சென்கோ கிண்டலடித்துள்ளார்.