தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து தம்பதி அடித்துக் கொல்லப்பட்டு முதலைகளுக்கு விருந்தாக்கிய கொடூரம் சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்த இங்கிலாந்து தம்பதியரை கொன்று முதலைகளுக்கு உடல்களை வீசிய சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில், ISIS உடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் மூன்று பேர், தம்பதியினரின் கடன் அட்டையை பயன்படுத்தி £ 37,000 செலவழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர்கள் ராட் சாண்டர்ஸ் (வயது 74) மற்றும் அவரது மனைவி ரேச்சல் (வயது63) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு பெப்ரவரியில், இங்கிலாந்து தாவரவியலாளர்களான குறித்து தம்பதி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தொலைதூரக் காட்டில் அரிய விதைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரும், தம்பதியரை கடத்திச் சென்று கொன்று, அவர்களின் உடல்களை பைகளில் வைத்து, முதலைகள் நிறைந்த ஆற்றின் மீது பாலத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர்.
கொல்லப்பட்ட தம்பதியினரின் உடல் எச்சங்கள் சில நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதுடன், டிஎன்ஏ சோதனையைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டன.