இங்கிலாந்து, தெற்கு லண்டனில் உள்ள அபோட்ஸ் பார்க் லாம்பெத் பூங்காவில் 20 வயது யுவதியை, மூன்று நாய்கள் சுற்றி வளைத்து கடித்து, தாக்கியதில் படுகாயமடைந்த அந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய்களின் உரிமையாளர், நாய்களை கட்டுப்படுத்த தவறியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பூங்காவுக்குள் பொலிஸார் வருவதற்குள் முன் நாய்களின் உரிமையாளர் தன்னுடைய செல்லப்பிராணிகளை அங்கிருந்து அழைத்து கொண்டு, தப்பிச் சென்றுவிட்டார்.
அவரை தேடும் பணியில் மெட் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1666710430578868225