சீனாவில் அரசாங்க அதிகாரிகள் வேலை நேரத்தின்போது ஐ-போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பில் நிறுவனத்தின் பங்கு விலைகள் 3.6 சதவீதம் சரிந்துள்ளன.
ஐ-போன் பயன்படுத்த பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டமையால் பங்கு விலைகள் சரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய வாரங்களில் அதிகாரிகளுக்கு அந்த உத்தரவு விடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்பில் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று சீனா என்பதும், அதன் வருவாயில் 5இல் ஒரு பங்கு சீனாவிலிருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் மோசமாகும் நிலையில், சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்கெனவே சீனத் நிறுவனமாக Huawei Technologies தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.