காசாவில் உள்ள ஐ.நா. பாடசாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
“இன்று காலை அல்-ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்,” என்று சுகாதார துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கத்ரா தெரிவித்தார்.
முன்னதாக இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்பட்டது.
இஸ்ரேல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐ.நா.-வும் எந்த தகவலும் வழங்கவில்லை.
இதேவேளை, காசா எல்லையில் உள்ள நான்கு ஐ.நா. பள்ளிகள் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்ததாக ஐ.நா.-வின் பாலஸ்தீனர்களுக்கான மீட்பு படை தெரிவித்துள்ளது.