செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அடுத்த ஆண்டு இங்கிலாந்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளுமா?

அடுத்த ஆண்டு இங்கிலாந்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளுமா?

1 minutes read

அடுத்த ஆண்டு கண்டிப்பாக தேர்தல் நடக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரித்துள்ளார்.

இதனால் தேர்தல் ஆண்டை நோக்கி இங்கிலாந்து செல்வதால், பிரதமரைப் பற்றிய கருத்துக் கணிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் ரிஷி சுனக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுக்கு இன்னும் மோசமான நிலை ஏற்படும் என்று 51 சதவீதமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 46 சதவீதமானோர் பொதுச்சேவைகளின் நிலை குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், 42 சதவீதமானோர் இங்கிலாந்தின் பொருளாதார நிலை குறித்தும், 40 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட நிதி நிலை குறித்தும் அக்கறை கொண்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நிலையான கால நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் 2025 ஜனவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

முன்னதாக, செப்டெம்பர் மாதம் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முடியும் என்று சுனக் வலியுறுத்தினார். ஏனெனில் அவர் பொதுத் தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்துவார் என்று Mirror தெரிவித்தது.

ஆனால், ரிஷி சுனக் குறைந்தபட்சம் 2030 வரை 10ஆவது இடத்தில் இருக்க விரும்புவதாக வெளிப்படுத்தியதால் ”வெற்றி பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More