Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலங்கை வந்த இங்கிலாந்து இளவரசி ஆன் தங்க புத்தகத்தில் பதிவிட்டார்

இலங்கை வந்த இங்கிலாந்து இளவரசி ஆன் தங்க புத்தகத்தில் பதிவிட்டார்

1 minutes read

இங்கிலாந்தின் இளவரசி ஆன் (Anne), இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (10) வந்தடைந்தார்.

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான யுஎல்-504 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 1.06க்கு வந்தடைந்தார்.

அவருடன் அவரது மருமகன் இளவரசர் வல்லப உட்பட 07 பேர் கொண்ட தூதுக்குழுவும் வந்திருந்தது. அவர்களை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீதா அரம்பேபொல இலங்கைக்கான இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு வரவேற்றது.

விமானத்திலிருந்து இறங்கிய பிறகு இளவரசி, சிவப்பு கம்பளத்தின் நடந்துவந்து விமான நிலையத்தின் தங்க நினைவு குறிப்பேட்டில் வருகையின் நினைவை பதிவிட்டார்.

பின்னர் விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் இடம்பெற்ற தேனீர் வைபவத்தின் பின்னர், விசேட வாகன அணிவகுப்பில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையையும் அவர் அவதானித்தார்.

இத்தொழிற்சாலையில் சுமார் ஒரு மணித்தியாலம் அவதானித்த பின்னர் கொழும்புக்குப் பயணித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More