தாய்லாந்தின் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் Suphan Buri பகுதியில் நேற்று (17) பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 பேரின் சடலங்களைக் கண்டுபிடித்திருப்பதை மீட்புக் குழு உறுதிப்படுத்தியது.
உயிரிழந்தோர் குறித்த சோதனைகள் நடப்பதாகக் அந்நாட்டு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
அருகில் உள்ள வீடுகளோ அங்கு வசிப்பவர்களோ பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வெடிப்பு சம்பவம் எப்படி ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.