Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போக்குவரத்து குற்றங்களை சமாளிக்க கொழும்பில் புதிய நடவடிக்கை

போக்குவரத்து குற்றங்களை சமாளிக்க கொழும்பில் புதிய நடவடிக்கை

0 minutes read

கொழும்பில் போக்குவரத்துக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தப் புதிய நடவடிக்கைகள், எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி, கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமெராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அத்துடன், CCTV கமெராக்கள் மூலம் குற்றவாளிகளை இனங்கண்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More