Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு; பணத்தை விடுவித்தது திறைசேரி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு; பணத்தை விடுவித்தது திறைசேரி

0 minutes read

2024 வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமான 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாயை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பணம் அச்சடிப்பது மற்றும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதால், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே உரிய தொகையை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More