Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவுகள்; இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல்

கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவுகள்; இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல்

0 minutes read

கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராசெனகா நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசி சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

அஸ்ட்ராசெனகா நிறுவனமும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கொவிஷீல்ட் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த அஸ்ட்ராசெனகா நிறுவனம், தங்கள் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்பட்டுத்தியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.

அதேவேளை, அஸ்ட்ராசெனகா நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு கேட்டு, 51 வழக்குகள் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் மீது விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More