செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்; உக்ரேன் அமைச்சரவையில் மாற்றம்!

வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்; உக்ரேன் அமைச்சரவையில் மாற்றம்!

0 minutes read

உக்ரேன் நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, நேற்று (4) பதவி விலகியுள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் போர் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று முன்தினம் (3) பதவி விலகிய நிலையில் மேலும் பல அமைச்சர்கள் விலகுவதும் புதியவர்கள் நியமிக்கப்படுவதும் இனிவரும் நாள்களில் இடம்பெறும் என்று ஜனாதிபதி ஸெலன்ஸ்கியின் உதவியாளர் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரேன் போரின் இக்கட்டான கட்டத்தில் வரவிருக்கும் இந்த அமைச்சரவை மாற்றங்கள் நாட்டை வலுப்படுத்தி எதிர்பார்க்கும் தீர்வுகளை அடைய தேவையானது என்று ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

குளிர்காலத்தை எதிர்கொள்ள அரசாங்கம் மாற்றியமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குலேபாவின் பதவி விலகல் கடிதம், சபாநாயகர் ருஸ்லான் ஸ்டெஃபான்சுக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் விரைவில் பதவி விலகல்கள் குறித்து விவாதிக்கும் என்று சபாநாயகர் அதில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More