செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நைஜீரிய பெட்ரோல் டேங்கர் லொறி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் தொகை 181ஆக அதிகரிப்பு!

நைஜீரிய பெட்ரோல் டேங்கர் லொறி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் தொகை 181ஆக அதிகரிப்பு!

0 minutes read

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லொறி கடந்த 15ம் திகதி இரவு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது.

இதனால், அந்த பெட்ரோலை சேகரிக்க அப்பகுதியிலுள்ள மக்கள் சாலையில் குவிந்தனர். மக்கள் பெட்ரோலை சேகரித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு, லொறி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் முதற்கட்டமாக 94 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More