செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு!

புதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு!

1 minutes read

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ எனப் பெயர் சூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டசபையில் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார்.

அந்தத் திட்டத்தில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு இந்திய மதிப்பில் 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அதற்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயிலும், மசூதியும் கட்டப்பட்டுவரும் நிலையில், அங்கு அதிகரிக்கப்போகும் பக்தர்கள் வரத்தைக் கருத்திற்கொண்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த விமான நிலையத்தை, பின்னர் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More