புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காணாமல் போன சிறுவர்கள் மூவரும் லண்டன் நோக்கிப் பயணித்திருக்கலாம்

காணாமல் போன சிறுவர்கள் மூவரும் லண்டன் நோக்கிப் பயணித்திருக்கலாம்

0 minutes read

இங்கிலாந்தில் காணாமல் போன மூன்று சிறுவர்களை மீட்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் மூவரும் தீம் பார்க்கில் (Theme park) ஒரு நாள் கழித்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (17) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளனர்.

காண்டி, ( Khandi வயது 14), அமெலியா, (Amelia வயது 09) மற்றும் மாலிக் (Malik வயது 07) ஆகிய சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்களை கண்டறிய உதவுமாறு பொலிஸார் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

மூவரும் கடைசியாக ஸ்டெயின்ஸ் நகர மையத்தை நோக்கி சுமார் 15:17 மணிக்கு நடந்து செல்வதைக் காணமுடிந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவர்கள் லண்டன் நோக்கிப் பயணித்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுவர்களில் இருவர் உறவினர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More