Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்கம் படப்பாணியில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுக் குப்பை கொள்கலன்கள்

சிங்கம் படப்பாணியில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுக் குப்பை கொள்கலன்கள்

3 minutes read

இலங்கைத் தீவு ஒரு அழகிய தீவாகும். உலகத்தின் சுற்றுலாப் பயணிகளை இந்த தீவு மிகவும் கவர்ந்திருக்கின்றது. இலங்கையின் அழகாலும், கேந்திர முக்கியத்துவமான இட அமைவாலும் சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் இலங்கையை கைப்பற்றினார்கள் அந்நியர்கள். இப்போதும் இலங்கையை கையிற்குள் வைத்திருப்பதற்கான அதிகாரப் போர் நடந்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில், அழகிய இலங்கையில், அரசியலும் பேரினவாதக் குப்பைகளும் நிறைந்துள்ள நிலையில், இலங்கைக்குள் வெளிநாட்டுக் கழிவுகளை கொட்டுகின்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் பாரிய நோய் தொற்றுக்கள் ஏற்படும் என்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அரசாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.

அழகிய இலங்கை க்கான பட முடிவு

சுங்­கத்­தி­ணைக்­களம் சுற்­றாடல் பாது­காப்பு  சுகா­தார நட­வ­டிக்­கை­களில் அக்­கறை செலுத்­த­ தவ­றி­யுள்­ளது எனவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார். இந்த கழிவுப் ­பொருட்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­தினை உணர்ந்து சுகா­தார நட­வ­டிக்­கை­களை  கண்­கா­ணிக்க அதி­கா­ரி­யொ­ரு­வரை நிய­மிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

மேலும், நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கழி­வுப்­பொ­ருட்­களில் மருத்­துவக்கழி­வுகள் மற்றும் உடல் பாகங்­களும்  காணப்­ப­டு­வ­தாக  அண்­மையில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. குறித்த சத்­திர சிகிச்சை கழி­வுகள் தொடர்பில்  வீர­கே­சரிக்கு பத்திரிகைக்கு தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

வெளி­நாட்டு கழி­வுகள்  நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை தொடர்பில்  தற்­போது பாரிய சர்ச்சை மூண்­டுள்­ளது. தடுத்துவைக்­கப்­பட்­டுள்ள கொள்­க­லன்­களில் மருத்­துவக்  கழி­வு­களும்  இருப்­ப­தாக  தக­வல்கள்   வெளி­வ­ரு­கின்­றன.  ஆகவே,  இது தொடர்பில்  உரிய  தரப்­பினர்  தகுந்த  விசா­ர­ணை­களை  மேற்­கொள்ள  வேண்டும். ஏனெனில்  அவ்­வா­றான  மருத்­துவக்  கழி­வுகள் காணப்­படின்  அது  மிகவும்  ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும்.  அதனை சாதா­ர­ண­மான  விட­ய­மாக    எடுத்­துக்­கொள்ள  முடி­யாது.

கொண்­டு­வ­ரப்­பட்ட  கழி­வுப்­பொ­ருட்கள்  தற்­போது  துறை­மு­கத்தில்   கொள்­க­லன்­க­ளி­லி­ருந்து வெளியில்  அகற்­றிய  நிலை­யி­லேயே காணப்­பு­டு­கின்­றன வெயில் , மழை  போன்­ற­வற்­றினால்  மேலும்  அவை  சேத­மா­வ­துடன்  சுற்­றுச்­சூ­ழ­லுக்கு  பங்கம்  விளை­விக்கக்  கூடிய  நிலை  காணப்­ப­டு­கின்­றது.

இதனால் புற்­றுநோய்  , சுவா­சப்­பி­ரச்­சினை, மற்றும் வாந்­தி­பேதி போன்ற நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள்  அதிகம் காணப்­ப­டு­கின்­றன. இது  தொடர்பில்   சுங்­கத்­தி­ணைக்­களம் அதீத கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.ஆனாலும், இது தொடர்பில் தகுந்த சுகா­தார நடை­மு­றைகள் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தில் இல்லை. இவ்­வா­றான  கழி­வுப்­பொ­ருட்­க­ளினால் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தில் தொழில்  புரி­வோ­ருக்கும்  பார­தூ­ர­மான பாதிப்­புக்கள்ஏற்­ப­டக்­கூ­டிய  ஆபத்து காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே, சுகா­தார நட­வ­டிக்­கைகள்  தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு சுங்­கத்­தி­ணைக்­க­ளத்­திடம் கேட்­டுக்­கொண்­டுள்­ளளோம். அர­சாங்கம்  நாட்­டுக்கு பாரிய ஆபத்தை ஏற்­ப­டுத்த கூடிய சிங்­கப்பூர்  ஒப்­பந்­தத்தில் திருட்­டுத்­த­ன­மாக  கைச்­சாத்­திட்­டது. அதன்­வி­ளை­வா­கவே இத்­த­கைய  நிலை  ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு எதி­ராக  அர­சாங்க  மருத்­துவ  அதி­கா­ரிகள்  சங்கம்  உள்­ளிட்ட  அமைப்­புக்கள் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தன.

சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் தர­வு­களின் படி  241  கழி­வுப்­பொ­ருட்­கொள்­க­லன்கள்  நாட்­டிற்குள்  கொண்டு வரப்­பட்­டுள்­ளன.  அவற்றில்130 கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவற்றில் எஞ்­சிய 111 கொள்­க­லன்கள் கொழும்பு துறை­மு­கத்தில்  தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் பொறுப்­புக்­கூற  வேண்­டிய  தரப்­பினர்  இந்தப் பிரச்­சி­னையை  திசை  திருப்ப  முயற்­சிக்­கின்­றனர். 2013  ஜூலை  13  ஆம்  திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி  அறி­வித்­தலைச்  சுட்டிக்காட்டி கடந்த  அரசாங்கத்தின்   மீது  குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்விடயம்  தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொள்ள  வேண்டியது அவசியமாகும்.  ஆகவே  , ஜனாதிபதி  இந்த விடயத்தில் கவனம்  செலுத்தி பிரச்சினைக்கு தீர்வைப்  பெற்றுத்  தருவதுடன், அவர் சுற்றாடல் அமைச்சர்  என்பதால்  இது தொடர்பில்  தகுந்த விசாரணைகளை  மேற்கொள்ள  ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழுவை   அமைக்க வேண்டும் என்றார்.

அழகிய இலங்கை க்கான பட முடிவுதமிழகத்திலிருந்து வெளிவந்த சூர்யா நடித்த சிங்கம் படத்தில், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வரும் குப்பைகளைப் பற்றியே பேசப்படுகின்றது. வெளிநாட்டுக் குப்பைகள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படம் அதுவாகும். இந்த நிலையில், இனியும் இந்தக் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கை ஒரு குப்பைமேடாகி அழிய நேரிடும்.

தொகுப்பு வணக்கம் லண்டனுக்காக தீபன். நன்றி வீரகேசரி. 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More