முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட விஸ்வமடு தொட்டியடி பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு நல்லின பசு மாடு ஒன்று இன்று வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய வன்செயல் காரணமாக கணவன் இரண்டு கால்களை இழந்துள்ளார், மனைவி கண் ஒன்றை இழந்துள்ளார்.
எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி கைக் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகளுடன் வசித்துவரும் இக் குடும்பத்திற்குபிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் தமிழ்த் தொண்டர் நிறுவனமான எதிர்காலத்திற்கான பாதை அமைப்பின் நிதி உதவியில் தர்மபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஜீவராசா இவ் வழங்கி வைத்துள்ளார்.