கல்கிஸ்ஸை கடலில் நீராடச்சென்ற நிலையில் அலையில் அள்ளுண்டுச்சென்று காணாமல்போயுள்ள இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தை சேர்ந்த வினித், ஜீவா ஆகிய இருவருமே நேற்று அலையில் அடித்து செல்லப்பட்டிருந்தனர்.
தனியார் நிறுவனமொன்றின் சார்பில் சுற்றுலா சென்றிருந்த இளைஞர்களில் ஏழு பேர் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஐந்து பேர் மீட்கப்பட்டிருந்தனர். இருவர் காணாமல் போயிருந்தனர்.
அச்சம்பவத்தால் பூண்டுலோயா பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.