Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலையில் கைக் குண்டுகள் மீட்பு!

திருகோணமலையில் கைக் குண்டுகள் மீட்பு!

1 minutes read

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடபட்டப்போது, ஐந்து கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை, திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது என தெரிவித்த சேருவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More