கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 655 இலங்கையர்களே இன்று (புதன்கிழமை) காலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சவூதி அரேபியாவில் இருந்து 293 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 193 பேரும் கட்டாரில் இருந்து 111 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.