செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எல்லாவற்றையும் ஒப்படைத்து சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது இலங்கை!

எல்லாவற்றையும் ஒப்படைத்து சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது இலங்கை!

0 minutes read

அரச நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படுவதை எதிர்த்த மக்கள், தற்போது எல்லாவற்றையும் சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டினார்.

மறைந்த விஜயகுமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வு சீதுவயில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அருகில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி, விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் தனக்கு சீனாவுக்கு எதிராக எதுவும் இல்லை என்று தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அழித்துவிட்டது என குற்றம் சாட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More