0
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 295 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 87 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.