Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்!

கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்!

1 minutes read

சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருள் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டதுடன், இந்த வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்சகர் துசார உப்புல்தெனிய தலைமையில் திருப்பெருந்துறையிலுள்ள சிறைச்சாலைக்கு சொந்தமான பண்ணையில் நடைபெற்றது.

இதில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்தி குழுவின் பிரதித் தலைவர் பா.சந்திரகுமார், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர மற்றும் அமைச்சர்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More