பண்டாரகம பகுதியில் நேற்றைய தினம் 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்படி நபருடன் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியொன்றையும் கைப்பற்றி யுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பண்டாரகம ரேருக்கான பிரதேசத்தில் மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் அவரது உறவு முறையான சகோதரர் ஒருவர் வீட்டில் மேற்படி போதைப்பொருளை பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். மேலும் ஒரு உடை பையில் போதை பொருளை மறைத்து வைத்து முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்லும் போதே பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான துபாய் நாட்டில் மறைந்து வாழும் சலிந்து என்பவரின் போதைப்பொருள் இதுவென்றும் அதேவேளை இதற்கு முன்னர் 50 கிலோவுக்கு அதிகமான போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகரின் போதைப்பொருள் வலையமைப்பில் மேற்படி போதைப்பொருள் தொடர்புடையது என்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி போதைப்பொருளுடன் சந்தேக நபர் போதைப்பொருள் ஒழிப்பு போலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடையவர் என்றும் பண்டாரகம கெளனிகம பிரதேசத்தை சேர்ந்தவரென்றும் அவர் மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.