Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

1 minutes read

மட்டக்களப்பு- கிரான் பகுதியிலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்த இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கிரான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பெண்டுகள்சேனை- பூலாக்காடு வயல் பகுதியில், மண் ஏற்றச் சென்றபோது, வயல் பகுதியில் நின்றோர் மண் ஏற்றியவர்களை துரத்தியபோது, குறித்த இளைஞன் ஓடிச் சென்று அருகிலுள்ள ஆளமான ஆற்றில் குதித்துள்ளார்.

இவ்வாறு ஆற்றில் குதித்தவர் பின்னர் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More