பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(06) நடைபெறவுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக திருக்கேதீச்சரர் ஆலயம் திகழ்கின்றது.
மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று(05) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றன.
ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(06) நடைபெறவுள்ளது.