செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாய் சாவு!

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாய் சாவு!

1 minutes read

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்குச் (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

மகனைத் தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராகத் தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனைக் கண்டுபிடித்துத் தரப் போராடியிருந்தார்.

அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாகத் தேடி அலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற குறித்த, தாயார் நோய் காரணமாக மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More