“இலங்கையில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனைப் பேணுவதற்கும் அரசின் மாதாந்த வருமானம் போதாது.”
– இவ்வாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் வருமானமத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.