செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புகைக்குள் சிக்கி வயோதிபர் சாவு!

புகைக்குள் சிக்கி வயோதிபர் சாவு!

0 minutes read

கிளிநொச்சி – பளையில் துப்பரவு செய்யப்பட்ட காணியின் குப்பையை எரித்த 73 வயது முதியவர் ஒருவர் புகைக்குள் அகப்பட்டு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பளைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரியபளையில் இடம்பெற்றுள்ளது என்று பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த முருகேசு என்னும் முதியவர் புற்கள் நிறைந்து காணப்பட்ட காணியை நேற்றுமுன்தினம் துப்பரவு செய்து சுற்றிவர குப்பையை குவித்து எரித்துள்ளார். அங்கு எழுந்த புகைக்குள் சிக்கிய முதியவர் வெளியேற முடியாமல் வீழ்ந்துள்ளார். இரவாகியும் வீடு திரும்பாததால் அவரைத் தேடிய உறவினர்கள் நேற்றுக் காலையில் காணிக்குச் சென்று பார்த்தபோது எரிகாயங்களுடன் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட பொலிஸார் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More