செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு அதிகாரிகளுக்கு ஜூலை முதல் இடமாற்றம்!

வடக்கு அதிகாரிகளுக்கு ஜூலை முதல் இடமாற்றம்!

1 minutes read

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின்படி, சங்கானை பிரதேச செயலர் திருமதி பி.பிரேமினி கிழக்கு மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண சபையில் பணியாற்றும் திருமதி கே.உதயகுமார் சங்கானை பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் திருமதி ந.இன்பராஜ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ந.திருலிங்கநாதன் வடக்கு மாகாண சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகப் பணியாற்றும் சி.கிருஷ்நேந்திரன் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நகரப் பிரதேச செயலர் பி.தனேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச செயலராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி எஸ்.மஞ்சுளாதேவி திருகோணமலை நகரப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பி.ஜெயகரன் வடக்கு மாகாண சபைக்கும், வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் பற்றிக் டிறைஞன், கரைச்சிப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More