Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

திருமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

0 minutes read

திருகோணமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வசந்தராஜா நிலுஜன் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More