செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை!

0 minutes read

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுவலகாலேவெவ, கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்தார் என்றும், தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மேலும் இருவர் மண்வெட்டியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கினர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு சொந்தமான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More