செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

0 minutes read

வெல்லவ ரயில்  நிலையத்துக்கு  அருகில் ரயிலை நோக்கி பாய முற்பட்ட தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்றச் சென்ற பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது வளர்ப்பு நாயுடன் வீடு ஒன்றுக்குச்  சென்றிருந்த நிலையில் அவ்வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் தனது வீட்டுக்கு புறப்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இவர் தனது வளர்ப்பு நாய் ரயிலை நோக்கி பாய முற்பட்ட போது அதைக் காப்பாற்ற சென்று ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் எங்கு சென்றாலும் தனது வளர்ப்பு நாயை தினமும் அழைத்து செல்வதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More