செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உலகத் தமிழர் பேரவையினர் இன்று யாழ். விஜயம்!

உலகத் தமிழர் பேரவையினர் இன்று யாழ். விஜயம்!

0 minutes read

உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

இந்தத் தகவலை உலகத் தமிழர் பேரவையின் பணிப்பாளர் பவன் பவகுகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.

இதன்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபடவுள்ளோம்.

அதன்பின்னர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரைச் சந்தித்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More