செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘பட்ஜட்’டின் மூன்றாவது வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் வெற்றி!

‘பட்ஜட்’டின் மூன்றாவது வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் வெற்றி!

1 minutes read

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் வழங்கப்பட்டன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் மாலை 6.40 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது. தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்தது.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றன.

இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி (இன்று) வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெற்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More